Saturday, June 27, 2009

E-Mailலில் வந்தவை

பக்தன் : கடவுளே..! நான் திருமணம் செஞ்சுக்கலாம்ன்னு இருக்கேன்.. எப்படிப்பட்ட பொண்ணை தேர்ந்தெடுக்கணும்..?


கடவுள் : நல்லா அழகானவளா இருக்கணும். நல்லா சமைக்கத் தெரிஞ்சவளா இருக்கணும்.. பணக்காரியா இருக்கணும்.. அப்புறம் ஒரு முக்கியமான விஷயம்.. மூணு பேரும் ஒருத்தரை ஒருத்தர் சந்திச்சுக்காம இருக்கணும்...!!!


-------------------------------------------------------------------------


ஒரு ஊரில் ஒரு சைவ காதலனும் சைவ காதலியும் இருந்தார்கள்..

காதலி எடை பார்க்கும் இயந்திரத்தில் ஏறி நின்றாள்..
65 கி.

குதி உயர் காலணியை அகற்றினாள்..
63 கி.


துப்பட்டாவை காதலனிடம் கொடுத்தாள்....
62 கி.



அத்துடன் கையில் இருந்த சில்லறை தீர்ந்தபடியால் அடுத்து என்ன செய்வதென்றறியாமல் நின்ற போது.. காதலன் சொன்னான்...

கவலைப்படாதே.. அன்பே.. என்கிட்ட 25 நாணயங்கள் இருக்கின்றன...!!!

------------------------------------------------------------------------------------------

ஒரு ஜவுளிக் கடையில் மனைவிகளை தொலைத்துவிட்ட இரு கணவன்மார்..


கணவன் 1 ; உங்க மனைவி எப்படி இருப்பாங்க..?

கணவன் 2 ; சிவப்பா, உயரமா, திரிஷா மாதிரி.. ஆமாம் உங்க வீட்டம்மா எப்படி இருப்பாங்க..?

கணவன் 1 ; அந்தக் கழுதை எப்படி இருந்தா என்ன்? வா.. உன் பொண்டாட்டியை தேடுவோம்..!!!


---------------------------------------------------

நன்றி MirZan அவர்கள்

No comments:

Post a Comment